தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 februari 2013

மருத்துவர் சிவதாசின் பித்தலாட்டம்: பாதிக்கப்பட்ட BBC தமிழோசை !


கடந்த வருடம் இலங்கை இராணுவத்தில், ஈழப் பெண்கள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என்பது யாவரும் அறிந்ததே. இவர்களில் சிலருக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும் மேலும் சிலருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளது என்றும் கூறி அவர்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்த்தது இலங்கை இராணுவம். இத்தமிழப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டிருக்கலாம், அதனால் தான் அவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் கசிய ஆரம்பித்தன. இதேவேளை இவ்வாறு சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என, கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண் ஒருவர் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்தார். இதனையடுத்து இச் செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. பல ஆங்கில இணையங்களுகும் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டது.

இதனையடுத்து பெருஞ்சிக்கலில் மாட்டிக்கொண்ட இலங்கை அரசு, தனது ஆதரவாளரான மருத்துவர் சிவதாஸ் என்பவரைக் களமிறக்கியது. மருத்துவர் சிவதாஸ் பல பொய்யான தகவல்களை கட்டவிழ்த்துவிட்டார். இப் பெண்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.... ஆனால் மீடியா துஷ்பிரயோகமே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இதனிடையே BBC தமிழோசை இவரை பேட்டி கண்டது. குறிப்பிட்ட அப் பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முட்டாள்தனமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் , கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள அப் பெண்களுக்கு அடித்தால் எல்லா வருத்தமும் போய் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒலி நாடாவாகவும் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட பெண்களை இராணுவம் நன்றாக அடித்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்பதே இதன் பொருள். அப்படி என்றால் அடி உதனை போன்ற சித்திரவதைகளை இம் மருத்துவர் ஊக்குவிக்கிறாரா என்ற கேள்விகளும் இங்கே எழுகின்றதல்லவா ? இதனை BBC போன்ற சர்வதேச ஊடகங்களும் ஆதரிக்கின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றது. எனவே மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இதனை BBC நிர்வாகத்திடம் கொண்டுசென்றுள்ளார்கள். இதனையடுத்து குறிப்பிட்ட இச் செவ்வி தொடர்பாகவும், மருத்துவர் சிவதாஸ் பேசிய விதம் தொடர்பாகவும் BBC நன்கு ஆராய்ந்துள்ளது. மேற்படி மருத்துவர் பேசியதில் பிழை இருப்பதை உணர்ந்த BBC இச் செய்தியை உடனடியாக தனது இணையத்தில் இருந்து அகற்றியுள்ளது. ஆனால் இதனைக் கேட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களிடம், இவை பிழையான தகவல் என்பதனை கூற BBC தமிழோசை தயாராக இல்லை. வெறுமனவே இச் செய்தியை அகற்றியுள்ளார்கள் அவ்வளவு தான்.

இலங்கை அரசின் பிரச்சாரப் பீரங்கியாக செயற்பட்ட மருத்துவர் சிவதாஸை ஒருதலைப் பட்ச்சமாகப் பேட்டி கண்டு, இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்துகொண்ட BBC தமிழோசை ஈழத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதனை, அவர்கள் வெளிக்கொண்டுவரவேண்டும். இது தொடர்பாக நாம் BBC நிர்வாகத்தினரை அணுக உள்ளோம். எனவே புலம்பெயர் மக்களே, இச் செய்தி தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருப்பின், கீழ் காணும் படிவம் ஊடாக அதனை அனுப்பிவையுங்கள். நான் அதனை BBC நிர்வாகிகளிடம் நிச்சயம் கொண்டுசெல்வோம். நன்றி.



http://athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4535

Geen opmerkingen:

Een reactie posten