[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 08:58.32 AM GMT ]
தலாவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சமூக இணையத்தளங்கள் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.
புதைக்கப்பட்ட புலியை எழுந்திருக்க செய்து நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஆரம்பிக்க இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று விட்டனர் என்று கூறி மகிந்த ராஜபக்ச ஆதரவு இணையத்தளங்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் எழுச்சி பெற இடமில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிக்கும் நரிகள் கூட்டம், புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்து வருகிறது.
தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணாவுக்கு மகிந்த பால் ஊட்டினார். அது மாத்திரமல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியையும் வழங்கினார்.
கே.பியை அரவணைத்து கொண்டு கே.பியின் கப்பல்கள், புலிகள் அமைப்பிடம் இருந்த தங்கம் என்பவற்றை மகிந்தவே கொள்ளையிட்டார்.
கொரக்கா புளியை வேட்டை இறைச்சியாகவும் வேட்டை இறைச்சியை கொரக்கா புளியாகவும் மாற்ற மகிந்த திறமைப்படைத்தவர்.
நாட்டுக்கு மக்களுக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை, ரத்துபஸ்வலயில் தண்ணீர் கேட்ட மக்களுக்கு தோட்டக்களை கொடுத்தனர்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் இளைஞர், யுவதிகளின் உரிமைகளுக்கு பதிலாக தோட்டக்களினால் பதிலளித்தனர் எனவும் அமைச்சர் பீ. ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற கலைப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 09:30.41 AM GMT ]
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையிலும் 49 சதவீதமான மக்கள், பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அரசியற் கட்சிகளின் தலைவர்களும் தாம் விரும்பியவாறு திகதிகளைக் கூறி மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
ஜனாதிபதியோ பாராளுமன்றத்தை கலைக்கும் விவகாரத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பது போல் தோன்றுகின்றது. எவரும் எதிர்பாராத தருணத்தில் அவர் இதற்கான அறிவிப்பை விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள போதிலும் பலவீனமான அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலையிலேயே உள்ளார் என்ற யதார்த்தத்தையும் மறந்துபோக முடியாது. எந்தவொரு தீர்மானத்தை எடுத்தாலும் அவர், ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
ஒருபுறம் அவர், தனது அரசியல் நண்பரை கைவிட்டு விடக்கூடாது. மறுபுறம் தனது அரசியல் எதிரியிடம் எதையும் இழந்து விடக்கூடாது. ஒரு வகையில் இக்கட்டான நிலைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார் என்று தோன்றுகின்றது.
இந்தவிதமான போக்குகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எப்படியாவது பிரதமர் வேட்பாளராக நிறுத்திவிட வேண்டும் என்பதில் அவரது ஆதரவு அணியினர் சளைக்காமல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக் ஷவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர். அவரைத் தவிர வேறு எவருக்கும் பிரதமராக முடியாது. ஜனாதிபதி நியமித்த சுதந்திரக் கட்சிக் குழுவின் இறுதித் தீர்மானம் இதுவாகும். ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என்று அக்குழுவின் உறுப்பினர் டி.பி.ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசியலில் அனைத்துப் பதவிகளையும் வகித்து விட்டார். இனி எந்தப் பதவியையும் அவர் வகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த தேர்தலில் தோல்வி கண்டவர் என்ற வகையில் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். நல்லாட்சிக்கான எமது பயணத்தை எவருக்காகவும், எதற்காகவும் நாம் பின்னோக்கி நகர்த்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாகப் பார்க்குமிடத்து தேர்தலில் மூன்றாவது அணி ஒன்று பலமான நிலையில் களமிறங்கி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை மூன்று பிரிவாகச் சிதறச் செய்யும் வாய்ப்புக்களே அதிகம் இருப்பதாக ஊகிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் தாண்டவமாடியதாகக் கூறிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியினர், எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பது எந்தவகையில் சாத்தியம் என்று எண்ணிபார்க்க வேண்டும்.
இது கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக அமைந்து விடுவது மாத்திரமன்றி, அவர்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் இல்லாமல் செய்துவிடும் என்ற கருத்துக்களும் பொதுவாகவே இருந்து வருகின்றன. அந்தவகையில் மைத்திரிபால சிறிசேன அநாவசியமான சிக்கல்களுக்கு இடமளியாத வகையிலேயே நிலைமையை கையாள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறு இருந்த போதிலும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு பிந்திப் போவதாலும், எதிர்க்கட்சியினரின் முட்டுக்கட்டைகள் காரணமாக அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கொண்டு நடத்த முடியாதவாறு ஏற்படும் சூழ்நிலைகளினாலும், அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி மருதானையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை வியாழனன்று நடத்தியது. இவை எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை மறந்துபோகக் கூடாது.
இதனிடையே, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஜனநாயக விரோதமான இந்த திருத்தத்தை அரசாங்கம் வாபஸ் பெறாவிடில், நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
20 ஆவது திருத்தச் சட்டமூலம் எமது நாட்டின் ஜனநாயகத்தையோ, நாட்டு மக்களின் உரிமைகளையோ மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகளையோ பாதுகாப்பதற்குப் போதுமானதாக இல்லை. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எந்தவகையிலும் எதிர்பார்க்கப்பட்ட சீர்த்திருத்தமாக அமையப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் அனுசரித்து தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களை ஒதுக்கியும், புறக்கணித்தும் கடந்த காலத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளே, நாட்டை இருண்ட யுகம் நோக்கிக் கொண்டு சென்றது என்ற யதார்த்தத்தையும் மறந்துபோகக் கூடாது.
இவை அனைத்துக்கும் மேலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிவாகை சூடுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களும் சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் மக்களே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதனிடையே, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் பலவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தீர்த்து வைக்கப்படாமல் கிடப்பில் இருப்பதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் கொண்டுள்ளனர். இது குறித்தும் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft6I.html
என்னிடம் கட்சி, நிற பேதங்கள் இல்லை: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 09:38.07 AM GMT ]
மக்களுக்கு சேவை செய்யும் போது நீலம், பச்சை என எண்ணி பணியாற்றுவதில்லை எனவும் ஜனாதிபதி என்ற வகையில் நடு நிலையாகவும் பக்க சார்பின்றியும் தனது சேவையை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கிராமம் ஒன்றில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் வறுமை, குறைப்பாடுகள், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய நடவடிக்கைகளிலும் அரசியல் பேதங்கள் இன்றி செயற்படுவதே தனது கொள்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பட்டதாரிகள் பிரச்சினைகள் விரைவில் ஜனாதிபதி, பிரதமர் கவனத்திற்கு: கிழக்கு மாகாண சபை சபாநாயகர்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 11:50.12 AM GMT ]
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாண சபை சபாநாயகருக்கும் இடையிலாக இன்று ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ.அரிகரன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அதிகளாவான தமிழ் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்பே நாட்டில் சுமூகமான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதனூடாக நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் சிறந்த ஸ்திரமான நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே எதிர்வரும் காலத்தில் சிறந்த நிலையான நேர்மையான அரசை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் கடந்த காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் ஒருவரே இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவர் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியவர்.
எதிர்காலத்தில் 10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தினையும் வகுத்து வருகின்றார். ஆகவே அதனூடாக உங்களது பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
சமகாலத்தில் கல்விக்கல்லூரி செல்கின்றவர்கள் கல்வியை நிறைவு செய்து வெளியேறுகின்போதே தொழில் வாய்ப்பினை பெறுகின்றனர். ஆனால் பல்கலைகழகம் செல்கின்றவர்கள் 4 வருடங்கள் கடந்தும் தொழில் வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி கிடப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றார்.
ஆகவே தமி;ழ் பட்டதாரிகளின் நிலை குறித்து முதலில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசப்படும். அதற்கும் தகுந்த சாதகமான பதில் கிடைக்காதவிடத்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தருவற்கு ஆவன செய்வேன் என்றார்.
இச்சந்திப்பின்போது அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களால் சபாநாயகருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், எதிர்வரும் தேர்தலுக்கு முன் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இங்கு உரையாற்றிய அமைப்பின் செயலாளர் பா.தட்சாயனண்,
தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் தலைமைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் நலன் சாராமல் செயற்படும் அவர்களை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft7G.html
Geen opmerkingen:
Een reactie posten