”சேர்… மேலதிக வகுப்புக்குச் சென்ற மகனை காணவில்லை சேர்…. எனக்குள்ள ஒரே மகன் சேர்…. எப்படியாவது கண்டு பிடித்துக் கொடுங்கள்.. சேர்….” என பெற்றோர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள். நிரஞ்சன் என்னும் 16 வயது மாணவனே இவ்வாறு காலையில் சென்று மாலை வீடு திரும்பவில்லை. அந்த கெஞ்சல் முறைப்பாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத , அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து அதிரடியாக விசேட தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்தார்கள். இரவு 12.00 மணி ஆகியும் , ஊர் மக்கள் தூங்கச் செல்லவில்லை. தொடர்ந்தும் தேடினார்கள். கடந்த 15ம் திகதி அதிகாலை சுமார் 3.50 மணிக்கு நிரஞ்சன் வீட்டிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு குறுக்குப் பாதையில் சந்தேகத்துக்கு இடமான இரத்தக் கறைகள் இருப்பது ஊராரால் அவதானிக்கப்பட்டது.
விடயம் உடனடியாக உடவலவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி. பண்டாரவிற்கு அறிவிக்கப்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த போது குறித்த இரத்தக் கறை இருந்த இடத்திலிருந்து சுமார் 30 மீற்றர் தூரத்துக்கு தொடர்ச்சியாக பாதையில் இரத்தம் வழிந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இரத்தக் கறை முடிவடைந்த இடத்திலிருந்து பாதையின் வலது பக்கமாக தேக்கு மரக் காட்டினுள்ளே ,3 அடிக்கு மேல் அடர்ந்து வளர்ந்த பற்றை பற்றைகளுக்குள் யாரும் எதிர்பார்க்காத அந்த விடயம் பொதிந்திருந்தது. ஆம். நிரஞ்சன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். பெற்றோர் கதறினர். மற்றோர் சோகத்தில் மயங்கினர். பயன் என்ன ? அப்போது நிரஞ்சன் இவ் உலகிற்கு விடை கொடுத்திருந்தான்.

அணிந்திருந்த இளம் சாம்பல் நிற முக்கால் காற்சட்டையில் தொடைப் பகுதியை ,ஊடறுத்து ஒரு வெட்டுக் காயம். இரு கைகளும் கழுத்தை நோக்கி மடக்கி இருக்க கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த டீ சேட் நெஞ்சுப் பகுதிவரை மேல் உயர்ந்திருக்க முதுகுப் பகுதியிலும் வயிற்றுப் பகுதிகளிலும் கீறல்கள், இரத்தக் கறைகள். அம்மா….. குற்றவாளிகளை நாம் எப்படியேனும் பிடிப்போம்…. என்ன செய்வது உங்களுக்கு ஆறுதல் கூற எனக்குத் தெரியவில்லை….. என கூறியவாறு சிறிது நேரம் அமைதி காத்த பொலிஸ் பரிசோதகர் பண்டார தனக்குத் தேவையான அந்தக் கேள்வியைக் கேட்டார். அம்மா…. மகனுக்கு யாருடனாவது பிரச்சினைகள் இருந்ததா ? அந்தக் கேள்விக்கு நிரஞ்சன் அம்மா தந்த பதில் நடந்தது என்ன என்பதை அம்பலப்படுத்தியது.
சேர்… எனக்கு தெரிந்த அளவில் பெரிய பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை. அவன் ஷாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலிக்கிறான். அது தொடர்பில் ஒரு ஆட்டோக்கார பையனுடன் பிரச்சினைப்பட்டான். அவ்வளவுதான் என நிரஞ்சனின் அம்மா பொலிஸ் நிலையம் போவதற்கு முன்பாகவே முக்கியமான தகவலை வழங்கினார். பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் மூளை உடன் இயங்கியது. தனது தொலைபேசியை எடுத்தார். பொலிஸ் பரிசோதகர் அமரசிறி பெரேராவை அழைத்தார். மூன்று குழுக்களை அழைத்தார். அதனுடாகவே முச்சக்கரவண்டி சாரதி சுஜீவவை தேடினார். பெற்றோரின் வாக்கு மூலம் எடுத்து முடிவதற்குள் சுஜிவவை பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தார். அன்று நடந்த பொலிசாரின் பூசையை அடுத்து , என்னை அடிக்காதிங்க சார் ... நான் முழுவதையும் சொல்கிறேன். அவளுக்காக தான் நான் நிரஞ்சனைக் கொன்றேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டான் ஆட்டோக்கார சுஜீவ.
சார் அவன் உயிரோடு இருக்கும்வரை , எனக்கு அவள் கிடைக்க மாட்டாள் ... அதனால் தான் கொலைசெய்தேன் என்றான். பொலிஸ் விசாரணைகளில் சந்தேக நபரான சுஜீவ வெளிப்படுத்திய தகவல்களின் படி நிரஞ்சன் மற்றும் ஷாமா ஆகியோர் ஒரே வகுப்பு மாணவர்கள். நிரஞ்சன் ஷாமாவைக் காதலித்து வந்தான். ஆனால் இதுவரை தனது காதலை ஷமா சொல்லவே இல்லை. இருப்பினும் நெருங்கிய நண்பியாக பழகி வந்துள்ளார். இருப்பினும் நிரஞ்சன் பற்றி யாராவது குறைசொன்னால் கூட ஷமா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குச் செல்லும் அளவு , அவர்கள் நட்பு இருந்தது. அப்படியான பின்னணியில் ஒருநாள் சுஜீவ தனது முச்சக்கரவண்டியில் வந்த ஷாமாவுக்கு தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து காதல் விண்ணப்பம் செய்துள்ளான். இந்த விடையத்தை ஷமா நிரஞ்சனிடம் கூறவே, நிரஞ்சன் சுஜீவவோடு தகறாறில் ஈடுபட்டுள்ளார். அது என் காதலி என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 14 ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்லும் போது நிரஞ்சனை ,கடத்தும் நாடகம் அரங்கேறியுள்ளது. இந்த கடத்தலுக்கு இந்திகவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். என பொலிஸார் சந்தேகிக்கும் நிலை அங்குதான் உருவானது. 18 வயதான இந்திகவுடன் நிரஞ்சன் கதைத்துக்கொண்டிருந்ததை பலர் அவதானித்துள்ள நிலையில் ,அதன் பின்னரே அவன் மாயமாகியுள்ளான். இந்நிலையில் இந்திகவையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்தனர். இந்திக தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்க சுஜீவவோ தான் ,மட்டுமே தனது முச்சக்கரவண்டியில் சென்று இந்த கொடூரக்கொலையை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான். நிரஞ்சன் வீட்டின் முன்னால் அவனை அழைத்துச்சென்றேன். சிறிது தூரம் சென்று அவனை கத்தியால் வெட்டிக் கொன்றேன். சடலத்தை காட்டுக்குள் இழுத்து சென்று வீசினேன் ,என சுஜீவ பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலையுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கருதும் பொலிஸார் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக அறிவியல் தடயங்களை வைத்து விசாரித்து வருகின்றனர். இந்திக இல்லாது இக்கொலை நடைபெற்றிருக்க சாத்தியம் இல்லை என்று பொலிசார் நம்புகிறார்கள். எது எப்படியோ காதலால் உயிர் பறிக்கப்பட்டோர் பட்டியலில் நிரஞ்சனின் பெயரும் பதிவாகி விட்டது போங்கள்.
விடயம் உடனடியாக உடவலவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி. பண்டாரவிற்கு அறிவிக்கப்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த போது குறித்த இரத்தக் கறை இருந்த இடத்திலிருந்து சுமார் 30 மீற்றர் தூரத்துக்கு தொடர்ச்சியாக பாதையில் இரத்தம் வழிந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இரத்தக் கறை முடிவடைந்த இடத்திலிருந்து பாதையின் வலது பக்கமாக தேக்கு மரக் காட்டினுள்ளே ,3 அடிக்கு மேல் அடர்ந்து வளர்ந்த பற்றை பற்றைகளுக்குள் யாரும் எதிர்பார்க்காத அந்த விடயம் பொதிந்திருந்தது. ஆம். நிரஞ்சன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். பெற்றோர் கதறினர். மற்றோர் சோகத்தில் மயங்கினர். பயன் என்ன ? அப்போது நிரஞ்சன் இவ் உலகிற்கு விடை கொடுத்திருந்தான்.
அணிந்திருந்த இளம் சாம்பல் நிற முக்கால் காற்சட்டையில் தொடைப் பகுதியை ,ஊடறுத்து ஒரு வெட்டுக் காயம். இரு கைகளும் கழுத்தை நோக்கி மடக்கி இருக்க கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த டீ சேட் நெஞ்சுப் பகுதிவரை மேல் உயர்ந்திருக்க முதுகுப் பகுதியிலும் வயிற்றுப் பகுதிகளிலும் கீறல்கள், இரத்தக் கறைகள். அம்மா….. குற்றவாளிகளை நாம் எப்படியேனும் பிடிப்போம்…. என்ன செய்வது உங்களுக்கு ஆறுதல் கூற எனக்குத் தெரியவில்லை….. என கூறியவாறு சிறிது நேரம் அமைதி காத்த பொலிஸ் பரிசோதகர் பண்டார தனக்குத் தேவையான அந்தக் கேள்வியைக் கேட்டார். அம்மா…. மகனுக்கு யாருடனாவது பிரச்சினைகள் இருந்ததா ? அந்தக் கேள்விக்கு நிரஞ்சன் அம்மா தந்த பதில் நடந்தது என்ன என்பதை அம்பலப்படுத்தியது.
சேர்… எனக்கு தெரிந்த அளவில் பெரிய பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை. அவன் ஷாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலிக்கிறான். அது தொடர்பில் ஒரு ஆட்டோக்கார பையனுடன் பிரச்சினைப்பட்டான். அவ்வளவுதான் என நிரஞ்சனின் அம்மா பொலிஸ் நிலையம் போவதற்கு முன்பாகவே முக்கியமான தகவலை வழங்கினார். பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் மூளை உடன் இயங்கியது. தனது தொலைபேசியை எடுத்தார். பொலிஸ் பரிசோதகர் அமரசிறி பெரேராவை அழைத்தார். மூன்று குழுக்களை அழைத்தார். அதனுடாகவே முச்சக்கரவண்டி சாரதி சுஜீவவை தேடினார். பெற்றோரின் வாக்கு மூலம் எடுத்து முடிவதற்குள் சுஜிவவை பொலிஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தார். அன்று நடந்த பொலிசாரின் பூசையை அடுத்து , என்னை அடிக்காதிங்க சார் ... நான் முழுவதையும் சொல்கிறேன். அவளுக்காக தான் நான் நிரஞ்சனைக் கொன்றேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டான் ஆட்டோக்கார சுஜீவ.
சார் அவன் உயிரோடு இருக்கும்வரை , எனக்கு அவள் கிடைக்க மாட்டாள் ... அதனால் தான் கொலைசெய்தேன் என்றான். பொலிஸ் விசாரணைகளில் சந்தேக நபரான சுஜீவ வெளிப்படுத்திய தகவல்களின் படி நிரஞ்சன் மற்றும் ஷாமா ஆகியோர் ஒரே வகுப்பு மாணவர்கள். நிரஞ்சன் ஷாமாவைக் காதலித்து வந்தான். ஆனால் இதுவரை தனது காதலை ஷமா சொல்லவே இல்லை. இருப்பினும் நெருங்கிய நண்பியாக பழகி வந்துள்ளார். இருப்பினும் நிரஞ்சன் பற்றி யாராவது குறைசொன்னால் கூட ஷமா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குச் செல்லும் அளவு , அவர்கள் நட்பு இருந்தது. அப்படியான பின்னணியில் ஒருநாள் சுஜீவ தனது முச்சக்கரவண்டியில் வந்த ஷாமாவுக்கு தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து காதல் விண்ணப்பம் செய்துள்ளான். இந்த விடையத்தை ஷமா நிரஞ்சனிடம் கூறவே, நிரஞ்சன் சுஜீவவோடு தகறாறில் ஈடுபட்டுள்ளார். அது என் காதலி என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 14 ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்லும் போது நிரஞ்சனை ,கடத்தும் நாடகம் அரங்கேறியுள்ளது. இந்த கடத்தலுக்கு இந்திகவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். என பொலிஸார் சந்தேகிக்கும் நிலை அங்குதான் உருவானது. 18 வயதான இந்திகவுடன் நிரஞ்சன் கதைத்துக்கொண்டிருந்ததை பலர் அவதானித்துள்ள நிலையில் ,அதன் பின்னரே அவன் மாயமாகியுள்ளான். இந்நிலையில் இந்திகவையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்தனர். இந்திக தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்க சுஜீவவோ தான் ,மட்டுமே தனது முச்சக்கரவண்டியில் சென்று இந்த கொடூரக்கொலையை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான். நிரஞ்சன் வீட்டின் முன்னால் அவனை அழைத்துச்சென்றேன். சிறிது தூரம் சென்று அவனை கத்தியால் வெட்டிக் கொன்றேன். சடலத்தை காட்டுக்குள் இழுத்து சென்று வீசினேன் ,என சுஜீவ பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலையுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கருதும் பொலிஸார் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்துக்கு மேலதிகமாக அறிவியல் தடயங்களை வைத்து விசாரித்து வருகின்றனர். இந்திக இல்லாது இக்கொலை நடைபெற்றிருக்க சாத்தியம் இல்லை என்று பொலிசார் நம்புகிறார்கள். எது எப்படியோ காதலால் உயிர் பறிக்கப்பட்டோர் பட்டியலில் நிரஞ்சனின் பெயரும் பதிவாகி விட்டது போங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten