நோர்வே நாட்டில் ஈழத் தமிழ் உணர்வாளருக்கு கலாநிதிப் பட்டம்: அதிர்வின் வாழ்த்துக்கள் !
[ Jun 26, 2015 03:35:42 PM | வாசித்தோர் : 13940 ]
மேலும் விஜய சங்கரது தந்தையார் தமிழக அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் ம.தி.மு.க வின் தர்மபுரி மாவட்ட கொள்கைபரப்பு செயலாளராக உள்ளார். அண்ணன் வைகோ அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான விஜய் அவர்கள், ஈழத் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட "உச்சிதனை முகர்ந்தால்" படத்தின் ஒரு தயாரிப்பாளராவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்திய அரசு மண் அகழ்வதையும் அங்கே உள்ள கனிமவழங்களை அது சுரண்டுவதால் மண் பெரிதும் பாதிப்படைவதாகவும் விஜய் பல ஆராட்சிக் கட்டுரைகளை வெளியிட்டு , இந்திய அரசின் எதிர்ப்பையும் சம்பாதித்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் மண் எமக்கு முக்கியம் என்ற கொள்கையை உடைய விஜய் அவர்கள் , ஈழத் தமிழர்கள் நடத்தி வரும் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் வித்தாக அமைந்தவர்.
இவர் நோர்வே நாட்டிற்கு வந்தவேளை , இளையோர்கள் தமிழீழ போராட்டத்தில் இறங்கவேண்டும் என்று இளையோர்களை ஊக்குவித்தார். அத்தோடு தமிழில் பெரும் தேர்ச்சி பெற்ற விஜய் , நோர்வே நாட்டில் உள்ள பல இளையோர்களுக்கு தமிழ் பாடம் கற்பித்து வந்தார்.
தாய் தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் போராட்டம் வலுப்பெறவும் . அங்கே அதனை அரசியல் போராட்டமாக கொண்டு செல்லவும் விஜய் அவர்கள் பல உதவிகளைச் செய்துள்ளார். அவருக்கு நோர்வே நாட்டில் இன்றைய தினம் கலாநிதிப் பட்டம்( டாக்டர்) கிடைக்கும் இந்த இனிய நாளில் , அனைத்து ஈழத் தமிழர்கள் சார்பாக அதிர்வு இணையம் அவரை வாழ்த்துவதில் மிகவும் பெருமையடைகிறது.
யாழ் மாணவி சேலையில் தொங்கி தற்கொலை : உண்மையான பின்னணி என்ன என்பது !
[ Jun 26, 2015 04:47:00 PM | வாசித்தோர் : 35990 ]
ஆனால் இந்த 24 வயது மாணவியை பளையைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மிகவும் முரடனான அவர் , இம்மாணவியின் கையடக்க தொலைபேசியை சில நாட்களுக்கு முன்னர் வீதியில் வைத்து பறித்ததாக கூறப்படுகிறது. குறித்த அந்த மோபைல் போனில் இருந்த புகைப்படங்கள் சிலவற்றை தான் இன்ரர் நெட்டில் ஏற்றப்போவதாக அவர் மிரட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதேவேளை மாணவியின் பேஸ் புக் கணக்கையும் அந்த முரடன் கைப்பற்றியதாகவும் , இதனால் கடும் மன உளைச்சலுக்கு மாணவி உள்ளானதாகவும் யாழில் இருந்து எமது புலனாய்வு நிருபர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பானுஷா என்னும் இந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடிவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten