[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 10:03.24 AM GMT ]
இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம்.
ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் அம்மையார் ஜெயலலிதா. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு. இலங்கை ஒரு நாடு அல்ல. அங்கு தமிழர்களும், சிங்களர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.
எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தான் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அதற்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான். இந்த நிலைப்பாட்டை ஏற்கிறோம். அதனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறோம்.
ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தியவர் இந்த மாநில முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlx4.html
சுயகட்டுப்பாட்டை பேணி எமது பாரம்பரியத்தை காப்பதன் மூலமே இருப்பை காக்க முடியும்: பேராசிரியர் வேல்.நம்பி
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 12:16.01 PM GMT ]
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களையும் வழி நடத்தியவர்களையும் மதிப்பளித்து பாராட்டி இந்த விழா சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பல்கலைகழக பேராசிரியர் வேல்நம்பி கலந்து கொள்ள, யாழ். மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், சமாதான நீதவான் சண்முகலிங்கம், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் உட்பட பல அறிவுசார் அனுபவம் சார் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து உரை நிகழ்த்தினர்.
சிறப்புரையாற்றிய பேராசிரியர் வேல்.நம்பி.
இங்கு நான் பல விடயங்களை இங்கு கலந்துகொண்டவர்கள் மற்றும் பேசியவர்களிடமிருந்து அறிய முடிந்தது. இத்தீவக மண்ணின் மைந்தர்கள் நாடுபூராவும் பல்வேறு இடங்களிலும் பல்வேறுதுறைகளிலும் வாழ்கிறார்கள்.
அவர்கள் இந்த மண்ணை நினைக்கின்றார்கள், அதற்காக பாடுபடுகின்றார்கள். நமக்கு கிடைக்கக்கூடிய அரும்பெரும் சொத்து நமது பாரம்பாரியங்களை கட்டிக்காத்து, நமது அடையாளத்தை பேணும்பண்பு. அதற்காக இந்த கிராமம் பாடுபடுவதை என்னால் உணரமுடிகின்றது.
இன்று எமது பாராம்பரியங்களை இன அடையாளங்களை சிதைப்பதற்கு பலர் முனைந்தாலும் நாம் எமக்கென்றொரு சுயகட்டுப்பாட்டை பேணி எதை நாம் செய்யவேண்டும்.
எதை நாம் செய்யக்கூடாது என்பதை நாமே முடிவெடுத்து வாழ வேண்டும். அதன்மூலமே நாம் எமது பாரம்பரியத்தை கல்வியை பேணமுடியும். அதன் மூலமே தமிழர் தாயகத்தின் இருப்பையும் காக்க முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், தனது கருத்தில் தீவகத்தில் காணப்படுகின்ற கல்வி, வள மற்றும் வீதி குறைபாடுகள் தொடர்பாகவும் அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டதுடன், தீவகத்தை மேம்படுத்த எத்தனை சவால்கள் வரினும் உழைப்போம் என உறுதி அளித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXkoy.html
Geen opmerkingen:
Een reactie posten