[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 02:17.16 PM GMT ]
இந்தப் பேச்சுவார்த்தை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஆசியா பாதுகாப்பு சேவைகள்- 2014 மாநாட்டின்போது நடைபெற்றதாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மற்றும் அவரது குழுவினருடன் சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தை தொடர்பான மேலதிக தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய மண்ணில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்காக வேலை செய்பவர்களைக் கைது செய்ய மலேஷியா, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறது.
அண்மையில் திரையிடப்படவிருந்த சனல்-4வின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான காணொளி திரையிடப்படுவதைத் மலேசிய அரசாங்கம் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXko1.html
காணாமல்போன சில நபர்கள் குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை: ஜனாதிபதி ஆணைக்குழு
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 02:53.50 PM GMT ]
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா இதுகுறித்து குறிப்பிடுகையில்,
சில முறைப்பாடுகளை விசாரணை செய்யும்போது, அந்நபர்கள் எங்கே, எப்படி காணாமல்போனார்கள் என்பது குறித்த எந்த வித தகவலும் கிடைக்கவிலை. இது பாரிய பிரச்சினையாக உள்ளது. எனினும், அம்முறைப்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் விசாரணை செய்து வருகின்றோம்.
காணாமல்போன நபர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் இறப்பு சான்றிதழை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களை பற்றிய ஆதாரங்கள் குறைவாக இருந்தபோதிலும் ஆணைக்குழு அவர்களைக் கண்டுபிடிக்கும் என மக்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடத்திய விசாரணையில், மக்கள் நல்ல மன நிலையில் இல்லை எனவும், சில குடும்பங்களில் 9-10 நபர்கள் காணாமல் போனதால் அக்குடும்ப உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் கலந்துரையாடியதை அடுத்து, குடும்ப மக்களுக்கு ஆலோசனை முகாம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXko2.html
Geen opmerkingen:
Een reactie posten