தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

இன்றைய நிலையில் தமிழீழம் சாத்தியமில்லை! மகிந்த அரசு தமிழர்களை நசிக்கிறது: ஆதங்கத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!


டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு?
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:07.35 AM GMT ]
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு வடக்கிலும் கிழக்கிலும் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் இந்த ஆணைக்குழு இதுவரை நடத்திய விசாரணைகளில், அரசபடையினர் மீதும், இந்த மூவரது குழுக்களின் மீதுமே அதிகப்படியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன சம்பவங்களுடன் இந்த மூவரும் வழிநடத்திய ஆயுதக் குழுக்கள் நேடியாகத் தொடர்புபட்டிருப்பதாகப் பல மனித உரிமை அமைப்புக்களும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கின்றன.
இவர்கள் மூவரும், ஏற்கனவே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையிலும் சாட்சியமளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலையில் தமிழீழம் சாத்தியமில்லை! மகிந்த அரசு தமிழர்களை நசிக்கிறது: ஆதங்கத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:19.04 AM GMT ]
இலங்கையில் ஆறாம் திருத்தம் உள்ளவரை தமிழர்களின் தாயகமான தமிழீழம் சாத்தியமற்ற விடயம் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள ஆறாம் திருத்தம் உள்ளவரை தமிழர்கள் ஈழம் பற்றி சிந்தனைக்கு வடிவம் ஏற்படாது. சர்வதேச தலையீடு ஒன்று ஏற்படுமாக இருந்தால் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தமிழீழம் அமைய வாய்ப்பு உள்ளது.
அதனையும் மகிந்த அரசு அனுமதிக்குமா என்பது சொல்ல முடியாது என லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் வினாக்களுக்கு பதில் அளிக்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten