[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 03:59.41 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையினை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ள அரசாங்கம். அவர்களின் விசாரணை செயற்பாடுகளுக்கு தகவல் வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இது அவர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். அப்படியொரு சட்டம் நாட்டில் இல்லையென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக முதன்முதலில் 1990ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு தகவல் வழங்கியவர்கள் தற்போதைய அமைச்சர் வாசுதேவ உள்ளிட்டவர்கள் என்பதை மறந்துவிட முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாடுகளுக்கு தகவல் வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டும். எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என்பதை நிரூபிக்க வேண்டும். அதனை விடுத்து நாம் ஒருதலைப்பட்சமாக அதனை நிராகரிக்கின்ற போது அது எமக்குப் பாதகமாகவே அமையும்.
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணையில் கலந்து கொள்ளாவிட்டால் தனித்து விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமைந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம்.
பொருளாதார தடை எனும்போது சொத்துக்களை முடக்குவது, பயணத் தடை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை நிறுத்துவது போன்ற செயற்பாடுகளை சர்வதேசம் மேற் கொள்ளும். எனவே, இதனால் ஏற்படும் பாதிப்பு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்குமேயாகும். எனவே, அரசாங்கம் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு தகவல் வழங்கக் கூடாதென்று சட்டம் எதுவும் கிடையாது. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணைக்கு தகவல் வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளானது அரசாங்கத்திற்கு எதிராக உள்ள சகல வழக்குகளின் சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்து சட்டத்தையும் ஒழுங்கையும் இந்த அரசு மீறுகின்றது என்பதை உலக நாடுகளுக்கு ஒப்புவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo2.html
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 04:28.55 AM GMT ]
நல்லிணக்கம் உள்ளிட்ட ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயற்பட வேண்டியது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அலுவலகம்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகள் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு வழியை ஏற்படுத்தும் என்று இலங்கைக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையை, இலங்கை நடைமுறைப்படுத்தாது என்று இலங்கை அரசாங்கம் அடிக்கடி கூறிவருவதை அடுத்தே, ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
இதேவேளை புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்தமை நல்லிணக்கத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கொழும்பு அலுவலகம், தடை குறித்து இலங்கை அரசாங்கம் இன்னும் சர்வதேச சமூகத்துக்கு விளக்கமளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியது.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo3.html
மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய அறிக்கையை இலங்கை கண்டித்துள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 04:29.36 AM GMT ]
இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் நியோமல் பெரேரா இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளது என்று நியோமல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமானால்எவரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடமுடியும் என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo4.html
Geen opmerkingen:
Een reactie posten