தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

மன்மோகனுக்கு மகிந்த அனுப்பி வைத்த அனுதாபக் கடிதம்!

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் ஆளும் கட்சியில் இணைவு!
[ வெள்ளிக்கிழமை, 21 யூன் 2013, 11:40.28 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ், கட்சியிலிருந்தும் மாநகர சபையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக பதவி விலகவுள்ளார் என்று தெரியவருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ள அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாகவும், அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இவ்விடயம் தொடர்பாக  நாளை சனிக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தாலும், சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்மோகனுக்கு மகிந்த அனுப்பி வைத்த அனுதாபக் கடிதம்!
[ வெள்ளிக்கிழமை, 21 யூன் 2013, 04:44.39 PM GMT ]
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அனுதாபக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
வட இந்தியாவில் உத்தரகாண்ட் பிரதேசம் மற்றும் கேதாரநாத் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தானும் தனது நாட்டு மக்களும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதாக மகிந்த ராஜபக்ச கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன்வேண்டி பிராத்திப்பதாகவும் ஜனாதிபதி தனது அனுதாபக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten