தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

பிரிட்டன் பொலிஸார் புலிகளுக்கு ஆதரவு! அங்குள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! ஹெல உறுமய

முக்கிய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது- பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 03:39.31 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் புறப்பட்டுச்சென்ற 88 பேரை அண்மையில் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இந்த 88 பேரில் குறித்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரும் உள்ளடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆரியனந்தன் பார்த்தீபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகக் குழுத் தலைவர் இத்தாலியில் கைது
இலங்கைப் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதீவ் தேவ நதுன் தர்மவிக்ரம என்னும் 42 வயதான கொஸ்கொட நதுன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் மிலான் வெனித்தியா பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார். சந்தேக நபருக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேரை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன் பொலிஸார் புலிகளுக்கு ஆதரவு! அங்குள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! ஹெல உறுமய
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 12:53.14 AM GMT ]
இங்கிலாந்தில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்த போதிலும், பிரித்தானிய அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு முறைமுகமாக வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாகவே, பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் முடிவில், புலிகளின் ஆதவாளர்கள் சிங்களவர்களை தாக்கி, அச்சமின்றி வெளிப்படையாக செயற்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியின் இறுதியில், சுமார் 200 விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், மிகவும் குழப்பமாக, வன்முறையாக செயற்பட்டு, சிங்கள கிரிக்கெட் ரசிகர்கள் மீது இரும்பு கம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர்.
இதற்கு முன்னர், இலங்கை அவுஸ்திரேலிய இடையிலான போட்டியின் போது புலிகளின் ஆதரவாளர்கள் சிங்களவர்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டனர். மேலும் சிங்கக் கொடியை மிதித்து கொண்டு புலிக் கொடியை ஏந்தியும் இலங்கைக்கு எதிராக பதாகைளை எடுத்து கொண்டும் மைதானத்தில் போட்டிக்கு தடையேற்படுத்தினர்.
அரையிறுதிப் போட்டியில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில், இந்த செயற்பாட்டில் ஈடுபட தயாராகி வருவதாக இலங்கை தூதரக அலுவலகம் ஊடாக பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து பிரித்தானிய அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு எமது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இங்கிலாந்தில் இருக்கும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசு, இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten