தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல!– ஜனாதிபதி


வெசாக் தினமான இன்று பெளத்த பிக்கு தீக்குளிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:22.29 AM GMT ]
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல!– ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 01:47.00 AM GMT ]
இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
பௌத்தர்கள் ஏனைய மதத்தவரை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
ஏனைய மத வழிபாட்டு;த் தளங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும்.
நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டில் தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten