ஆனால் அதுக்கும் இப்போது வேட்டு விழும்போல இருக்கே ! கனடாவில் வழமையாக மே 18 நிகழ்வுகளை நடத்தும் புலம்பெயர் அமைப்பை, ஓரங்கட்டிவிட்டு தாமே இம் முறை மே 18 நிகழ்வுகளை நடத்துவோம் என்று இந்திய இயக்கத்தின் துணை அலுவலகம் நாண்டு பிடிக்கிறதாம். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட துயரமான நாள் அது. இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கொடுமை நடைபெற்றதே இல்லை என்று வேற்றின மக்களால், கூறப்படும் கோரம் இது. ஆனால் இன் நிகழ்வுகளை நடத்தி அதில் உண்டியலைக் குலுக்க, இந்த இயக்கம் முனைப்புக் காட்டுவது மிகவும் வேதனைக்குரிய விடையமாக அமைந்துள்ளது என கனடாவில் உள்ள அதிர்வின் நிருபர் மேலும் தெரிவித்துள்ளார். இனி நடக்கவிருப்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
லண்டனில் இம் முறை ஒரே இடத்தில்தான் மே 18 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. லண்டனில் அதிகம் வெளிநாட்டவர் வரும் இடம் ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் வரவேற்க்கத்தக்க விடையமாகும். லண்டனில் பல ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடத்தில் இம் முறை மே 18 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten