தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!- கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல்


மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறாமைக்கு ஜெயலலிதாவே காரணம்: ஜீ.கே.வாசன்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 03:09.21 AM GMT ]
இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெயலலிதாவின் தமிழக நிர்வாகத்தின் காரணமாக நடைபெறாமல் போனது என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி 27 ஆம் திகதியன்று இலங்கை இந்திய மீனவர்கள் சென்னையில் சந்தித்து பேசினர்.
இதன்போது கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது சந்திப்பில் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது என்று இரண்டு தரப்பும் இணங்கியிருந்தன.
மத்திய அரசாங்கம் இதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தபோதும், தமிழக அரசாங்கத்தின் நிபந்தனைகள் காரணமாகவே பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது என்று வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!- கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:31.33 AM GMT ]
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும்.
அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதுடன், அதற்கு அயல்நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கைக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றன.
அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு. இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten