தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

யாழ்ப்பாணத்தில் சிற்றூந்து உரிமையாளர் மீது இராணுவம் தாக்குதல்


இலங்கையை துண்டாட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றியளிக்காத முயற்சிகள்: இராணுவ தளபதி
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 01:51.00 AM GMT ]
நாட்டை பிரிப்பதற்கான வெற்றியளிக்காத பல்வேறு முயற்சிகள் வெளிநாட்டிலும்> உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமாதானம் மற்றும் மறுசீரைமப்பு நடவடிக்கைகளை குழப்பியடிப்பதற்காக பிரிவினைவாதிகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களை தகர்த்தெறிய இலங்கை இராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதுவருடப் பிறப்பை பயன்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான சிறந்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிற்றூந்து உரிமையாளர் மீது இராணுவம் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 11:55.05 PM GMT ]
யாழ்ப்பாணம், பண்ணை சிற்றூந்து நிலையத்துக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூந்தின் உரிமையாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு 7.00  மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
முன்பகை ஒன்றின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான சிற்றூந்தின் உரிமையாளர் துரைராசா மகேந்திரராசா என்பவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 10 பேர் கொண்ட இராணுவக் குழு ஒன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten