பாலித்தீன் பைகளின் அடைக்கப்பட்டு இவை புதைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. குறித்த அந்த ஆவனத்தில் இருந்தே பலரது பெயர்களை இலங்கை புலனாய்வுத் துறை பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சுமார் 400 தமிழர்களது பெயர் பட்டியலை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது என்ற செய்தியை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்திருப்பீர்கள். அப்பெயர்கள் இதனூடாகவே பெறப்பட்டுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குச் சென்று, சிலர் பயிற்ச்சிப் பட்டறைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் என்றும், அவர்களது பெயர்களே தற்போது சிக்கியுள்ளதாகவும் , ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கிறது.
இருப்பினும் இலங்கை அரசு, இந்த ஆவணத்தில் உள்ள பெயர்களை தவிர, தமக்கு வேண்டாத புலம்பெயர் தமிழர்களின் பெயர்களையும் இணைந்துள்ளார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten