தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு நடத்தி நகைக்கடையில் கொள்ளை
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 04:28.13 PM GMT ]
நீர்கொழும்பு கிறின்சி வீதியில் உள்ள நகை கடையொன்றில் இனந்தெரியாத குழுவினரால் 15 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணி அளவில் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.
ஐவரடங்கிய ஆயுதக் குழு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXjpz.html
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 04:36.10 PM GMT ]
தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் உட்பட்ட குழுவினரால் தாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவின் தகவல்படி இன்று மாலை அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு செல்ல ஐக்கிய தேசியக் கட்சி முன்கூட்டிய அனுமதியை பெற்றிருந்தது.
இந்த நிலையிலேயே அஜித் பி பெரேரா, ஆர் யோகராஜன் உள்ளிட்ட தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹர்ச டி சில்வா தெரிவித்தார்
http://www.tamilwin.com/show-RUmsyESbLXjp0.html

Geen opmerkingen:

Een reactie posten