தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

Rajya Sabha adjourned over harassment of fishermen by SL Navy


ஒரு சிங்கள மீனவரை இந்தியா கைது செய்துள்ளதா? பாராளுமன்றில் அதிமுக எம்.பிக்கள் ஆவேச பேச்சு
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பாராளுமன்றில் அதிமுக, திமுக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன .
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது தொடர்பாக இன்று லோக்சபாவில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அ. தி.மு.க., எம்,பி, தம்பித்துரை கூறுகையில்:
பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு பல கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் இது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
பல இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசு இது வரை ஒரு சிங்கள மீனவரையாவது கைது செய்திருக்கிறதா?
நமது கடற்படையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.
சமீப காலமாக இலங்கை அரசின் இந்த அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., தரப்பில் பேசிய டி.கே.எஸ்., இளங்கோவனும் மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பேசினார்.
இதனால் காங், அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.க்களிடையே காரசார விவாதம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து  பாராளுமன்றில் ஏற்பட்ட அமளி காரணமாக இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன .
இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 70 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் வசம் இருப்பதால் அவர்கள் எப்போது திரும்பி வருவர், அவர்களது நிலை என்னவாகும் என்ற கவலையில் இராமேஸ்வரம் மீனவ குடும்பத்தினர் உள்ளனர்.
http://news.lankasri.com/show-RUmryDSYNYgq3.html

Rajya Sabha adjourned over harassment of fishermen by SL Navy
[ Thursday, 14 March 2013, 10:43.34 AM GMT +05:30 ]
The Rajya Sabha was adjourned till noon on Thursday as AIADMK members sought an immediate reply from the government on the alleged harassment of Indian fishermen by the Sri Lankan Navy. 
AIADMK and DMK members raised the issue soon after the house met for the day.
DMK member Tiruchi Siva said “harassment”of Indian fishermen by the Sri Lankan Navy was an “ongoing affair” and six such incidents had occurred over the past month.
V Maitreyan of AIADMK also expressed his concern over the matter and sought an answer from the government.
Chairman M Hamid Ansari asked Maitreyan to take his seat amid noisy scenes in the house on the issue. As the din continued, the chairman adjourned the house till 12 noon.
Bharatiya Janata Party members M Venkaiah Naidu and Mukhtar Abbas Naqvi earlier sought suspension of Question Hour to discuss the terrorist attack in Srinagar on Wednesday in which five CRPF personnel were killed.

http://eng.lankasri.com/view.php?22eOld0acf5YOd4e2UMC302cAmB3ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten