தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

இசைப்பிரியாவின் படுகொலை மன்னிக்க முடியாத குற்றம்: ரணில் விக்ரமசிங்க !


விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றாலும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்த காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசனங்கள் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக எவ்வாறு கருதமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten