சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது.
நேற்று ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில்,நோ பயர் ஸோன்” (போர்தவிர்ப்பு வலயம்) ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
போர் தவிர்ப்பு வலயம் திரையிடப்படுவதற்கு முன்னர் அறிமுகவுரை நிகழ்த்திய அவர்,
“நீதித்துறைச் சுதந்திரம், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு அங்கு இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று விடுக்கப்படும் அழைப்புகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் வாக்கெடுப்பு ஒன்றுக்குத் தள்ளினால், அது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படும். அனைத்துலக சமூகத்தின் முன் அவமானப்பட்டு நிற்கும்.
போரில் இழப்புகள் ஏற்பட்டது என்பது முதலாவது உண்மை. இந்த உண்மையை பகிரங்கமாக சிறிலங்கா மறுக்கப்படுகிறது. இப்போது சிறிலங்கா உண்மையை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYmt0.html#sthash.Mk5JrtIj.dpufபோர் தவிர்ப்பு வலயம் திரையிடப்படுவதற்கு முன்னர் அறிமுகவுரை நிகழ்த்திய அவர்,
“நீதித்துறைச் சுதந்திரம், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு அங்கு இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று விடுக்கப்படும் அழைப்புகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் வாக்கெடுப்பு ஒன்றுக்குத் தள்ளினால், அது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படும். அனைத்துலக சமூகத்தின் முன் அவமானப்பட்டு நிற்கும்.
போரில் இழப்புகள் ஏற்பட்டது என்பது முதலாவது உண்மை. இந்த உண்மையை பகிரங்கமாக சிறிலங்கா மறுக்கப்படுகிறது. இப்போது சிறிலங்கா உண்மையை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten