தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கொல்லப்படவில்லை!- ஏ.கே.அந்தோனி


இலங்கைக் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாகாலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன. எனினும் இந்த தாக்குதல் தொடர்பிலான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எவையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 2008ம் ஆண்டு இந்த விடயத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியா இந்த விடத்தில் உன்னிபாக அவதானத்தை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten