தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

துப்பாக்கி முனையில் ஐ.நா அதிகாரி கடத்தல்



சிரியா அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படையினர், ஐ.நா. அமைதிப் படையினர் 20 பேரை துப்பாக்கி முனையில் பிடித்து, அடைத்து வைத்துள்ளனர். சிரியா உள்நாட்டு யுத்தத்தில் இந்த சம்பவம், சில மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது. சிரியா போராளிப் படையினர், இதுவரை முற்றுமுழுதாக மேலை நாட்டு ஆதரவை பெற்றிருந்தனர். தற்போது, ஐ.நா. அமைதிப் படையினரின்மீது கை வைத்திருப்பதால், முதல் தடவையாக மேலை நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்துள்ளனர். இது, அவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்தக்கூடிய நடைமுறை.

இதில் தமாஷ் என்னவென்றால், ஐ.நா. அமைதிப்படையினர் அங்கு இருப்பது, போராளிப் படையினரின் நடவடிக்கைகளை கண்காணிக்க அல்ல. போலன் ஹைட்ஸ் பகுதியில், சிரியா, இஸ்ரேலிய ராணுவங்களுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தத்தை கண்காணிக்கவே ஐ.நா. அமைதிப்படை அங்கே உள்ளது. UNDOF என்று அழைக்கப்படும் இந்த அமைதிப் படையினரின் முகாமை ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட சுமார் 30 போராளிப் படையினர், 20 அமைதிப்படை வீரர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

சிரியா போராளிப் படையினருக்கு மேலை நாடுகள், எல்லை வழியாக ‘ரகசியமாக’ ஆயுத சப்ளை செய்து யுத்தத்துக்கு உதவும் நிலையில், தமது தலையில் தாமே மண் அள்ளி போட்டுக் கொண்டுள்ளனர், சிரியா போராளிப் படையினர். (அவர்களில் சுமார் 7 குழுக்கள் உள்ளன. இது எந்தக் குழுவின் வேலை என்று தெரியவில்லை)

இதன் ரியாக்க்ஷன், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தெரியும்.

Geen opmerkingen:

Een reactie posten