ராஜபக்ஷ திருப்பதி போகிறார்.... அதனால் தமிழ் நாட்டிலும் சரி ரெணி குண்டாவிலும் சரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தது இது தான் எமக்கு தெரிந்த செய்தி ! ராஜபக்ஷவுக்கு யார் லட்டுக்கொடுத்தார்கள் ? யார் யார் அவரை வரவேற்றார்கள் ? மொத்தத்தில் அங்கே என்ன தான் நடந்தது ? இதோ நடந்தவற்ரை அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம் ...
ராஜபக்ஷே நேற்று முன் தினம் இரவு திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். மறு நாள் அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று உள்ளனர். காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் ராஜபக்ஷே பங்கேற்று, சாமி தரிசனம் செய்தாராம். பாபிராஜு பிரசாதம் வழங்கியிருக்கிறார் ! அதாவது லட்டு தான்.... சும்மா இல்லை 60 ஸ்பெஷல் லட்டு இதற்காக தயாராகியுள்ளது. கையில் கிடைத்த லட்டை மகிந்தர் டேஸ்ட் பார்த்திருக்கிறார்...
ராஜபக்ஷேவின் திருப்பதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூர் மாவட்டம, நகரி, காளஹஸ்தி, உள்பட பல்வேறு நகரங்களில் ம.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தி விட்டனர் எனவும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது ! மொத்தத்தில் வந்தார் தின்றார் சென்றார் ! அவ்வளவு தான் !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான் .
Geen opmerkingen:
Een reactie posten