இலங்கையில் பொதுபல சேனா என்ற அமைப்பு முஸ்லிம்களைக் குறிவைத்து வன்முறைகளை தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக முஸ்லிம்- தமிழ் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களின் காணிகளை பலாத்காரமாக ஆக்கிரமிப்பதாகவும், பள்ளிவாசல்களை அடித்து உடைப்பதாகவும் முஸ்லிம்களின் மனித உரிமைகள் பல்வேறு விதங்களில் மீறப்படுவதாகவும் அக்கடிதம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி இருந்தும் அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten