அமெரிக்கா இராஜாங்கதிணைக்களத்தின் பேச்சாளர் இதனைத் அறிவித்துள்ளார். ஹிந்து பத்திரிகையின் தகவல்படி, அமெரிக்காவினால் 5 லட்சம் டொலர்கள் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்காவும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மறுசீரமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டினை உறுதி செய்யும் வகையிலான வேலைத்திட்டத்துக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten