இலங்கை தொடர்பில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் 2ம் நகலினை ஜெனீவாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உறுப்பு நாடுகளுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில்உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
மேலும் எதிர்வரும் 13-14ம் திகதிகளிலேயே உத்தியோகபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கவுள்ளது என தெரியவந்துள்ளது.
மேலும் உறுப்பு நாடுகளுக்கு தான வழங்கிய பிரேரணை நகல் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை உப மாநாடொன்றினை நடத்தியுள்ளது.
ஆனாலும் கொழும்பு கெசட் செய்திகளில் பேரவையின் உறுப்பினர்களுக்கு ஆவணங்கள் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த பிரேரணை வரைபு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக வெளிவந்துள்ளது.
மேலும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் இந்த பிரேரணை வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாதவிவாதங்களின்போது இந்த பிரேரணை வரைபு மாற்றங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச சுயாதீன விசாரணைக்கு இந்த யோசனையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பேச்சு சுதந்திரம், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் அடக்குமுறை என்பன தொடர்பில் யோசனையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten