தமிழ்நாடு செல்லும் இலங்கை புத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மற்றும் சென்னையில், சமீபத்தில் புத்த பிக்குகள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து கொழும்பு–சென்னைக்கு இடையேயான விமான சேவையை இலங்கை அரசு பாதியாக குறைத்துள்ளது.
ஏற்கனவே வாரத்திற்கு 28 விமானங்கள் சென்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 14 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் புத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்திய அரசிடம் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten