தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்குப் பலனில்லை!- பாமக ராமதாஸ்



ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே  ராமதாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கையில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்கா நடத்தும் நாடகத்துக்கு இந்தியா துணைபோகிறது. அதற்கு தி.மு.க-வும் ஆதரவாகச் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்று இன்று கூறினார்.
http://news.lankasri.com/show-RUmryDSXNYhs5.html

Geen opmerkingen:

Een reactie posten