தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

பெண்படைச் சிப்பாயை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது


பெண் படைச் சிப்பாய் ஒருவரை அச்சுறுத்திய அரசியல்வாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கலிகமுவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அனுர மஞ்சநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் படைச் சிப்பாய் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீதி ஒன்றை அமைப்பது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக இவ்வாறு குறித்த பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், பெண் படைச் சிப்பாயை அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten