தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

விசா­ரணை அமர்­வு­களை பார்­வை­யிட நிபுணர் குழு விரும்­ப­வில்லை என்கிறார் பரணகம!

நிதிமோசடி பெரிய விடயம் கிடையாது: ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:28.23 AM GMT ]
நிதிமோசடி போன்ற விடயங்கள் எல்லாம் ஒன்றும் பெரிய விடயங்கள் கிடையாது என்று ஞானசார தேரர் கர்ஜித்துள்ளார்.
பொதுபல சேனாவின் பிரதிச் செயலாளர் வெல்லம்பிடியே சுமண தம்ம தேரர் முறைகேடான வகையில் விகாரையொன்றுக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து லட்சக்கணக்கிலான பணத்தைச் கொள்ளையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டது குறித்து இணையத்தள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தன.
இது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெல்லம்பிடிய சுமண தேரரின் கைது தொடர்பாக ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது ஞானசார தேரர் எரிந்து விழுந்துள்ளார்.
தமது அமைப்பின் பிரதிச் செயலாளர் முறைகேடு செய்திருப்பது உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ள அவர், பணமோசடி ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வெல்லம்பிடிய சுமண தேரரின் நடவடிக்கை காரணமாக தமது அமைப்புக்கு எந்தவித கெட்டபெயரோ, நெருக்கடியோ ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw0.html
தகவல் திரட்டுதல் உளவு அல்ல: கிளிநொச்சி கட்டளை தளபதி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:37.04 AM GMT ]
பாதுகாப்பு படையினர் மக்களின் அன்றாட செயற்பாடுகளின் தொடர்பில் உளவு பார்க்கவில்லை சிலர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக கிளிநொச்சி பாதுகாப்பு படையனி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த தெரிவிக்கின்றார்.
பயங்கரவாத செயற்பாடுகள் அரச விரோத நடவடிக்கைகளையே சுற்றி வளைப்பது பாதுகாப்பு பிரிவின் கடமை இதில் சிவில் பிரஜைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இனவாதத்தை தூண்டுவது போன்ற செயற்பாடுகளில் யாராவது செயற்படுகின்றனரா என்பதில் நாங்கள் இன்னும் விழிப்பாக இருக்கின்றோம்.
மாற்று சிந்தனைக் கொண்ட பூசகர் ஒருவர் இனவாதத்தை தூண்டும் வகையில் எழுதிய கவிதை புத்தகத்தை வடபகுதி பாடசாலைகளுக்கு விநியோகிக்க வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அரசை கோரியுள்ளனர்.
படையினர் இந்த பிரதேசத்தில் பாரிய சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பாதுகாப்பு படையினரை இந்தப்பகுதியிலிருந்து வெளியேற்ற கூட்டமைப்பு கோரிக்கை வைக்கின்றனர் ஆனால் வடக்கில் படையினர் தொடர்ந்து இருக்கவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw1.html

யாழ் வரும் மஹிந்த மோட்டார் சைக்கிளும் விற்கவுள்ளார்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 06:10.44 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.
ஆண் அரச உத்தியோகத்தர்களுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும், பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு 45 ஆயிரம் ரூபாவுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்காக ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு வரப்பட்டு காட்சிப்டுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் வந்தடைந்து விட்டது.
எனினும் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் தற்பொழுது யாழ்.துரையப்பாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw3.html
விசா­ரணை அமர்­வு­களை பார்­வை­யிட நிபுணர் குழு விரும்­ப­வில்லை என்கிறார் பரணகம!
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 06:47.06 AM GMT ]
காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­வ­தேச நிபுணர் குழு­வினர் உள்­ளூரில் நாம் நடத்தும் விசா­ரணை அமர்­வு­களை பார்­வை­யிட விரும்­ப­வில்லை. என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார்.
ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வல் பர­ண­கம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,
எமது ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவில் மூன்­று­ பேரை நான் கொழும்பில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினேன்.
குறிப்­பாக சேர் டெஸ்மன்ட் டீ. சில்வா மற்றும் இந்­தியா பாகிஸ்தான் நாடு­க­ளி­லி­ருந்து நிய­மிக்­க­ப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­க­ளையே நான் அண்­மையி்ல் சந்­தித்து பேச்சு நடத்­தினேன்.
இதன்­போது உள்­ளக விசா­ரணை செயற்­பாட்­டுடன் தொடர்­பு­ப­டு­கின்ற சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் என்­ப­னவை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டினோம்.
எந்த நேரத்­திலும் தங்­க­ளுடன் தொடர்­பு­ கொள்­ளு­மாறும் தாங்கள் ஆலோ­சனை வழங்க தயா­ராக இருப்­ப­தா­கவும் சந்­திப்­பின் ­போது நிபுணர் குழு­வினர் என்­னிடம் கூறினர்.
எமது ஆணைக்­குழு முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ரணை நடத்தும் செயன்­மு­றையை நிபுணர் குழு­வுக்கு எடுத்­துக்­ கூ­றினோம். அது தொடர்பில் அவர்கள் திருப்­தி­ய­டைந்­தனர்.
ஆனால் சர்­வ­தேச நிபுணர் குழு­வினர் எமது ஆணைக்­கு­ழு­வினால் நடத்­தப்­படும் விசா­ரணை அமர்­வு­களை பார்­வை­யிட விரும்­ப­வில்லை. காரணம் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஆணையை மீறி செல்­வ­தற்கு தயா­ரில்லை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் ஒரு அமர்­வை­யா­வது வந்து பார்­வை­யி­டு­மாறு நான் கோரிக்கை விடுத்தேன். அது தொடர்பில் எதிர்­கா­லத்தில் பரி­சீ­லிப்­ப­தாக அவர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw5.html

Geen opmerkingen:

Een reactie posten