அக்கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு திருட்டு மின்சாரம் பெற்றதாகவும் பொலிஸார் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
ஈ.பி.டி.பி அமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினராக இருந்து, பின்னர் திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த் என்பவர் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி என்ற ஒன்றை உருவாக்கி அதன் செயலாளர் நாயகமாக இருக்கின்றார்.
இந்நிலையில் இவர் தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்று தமிழ்த் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் பேசுவதும், அவை ஊடகங்களில் இடம்பெறும் வகையில் போராட்டங்கள் உண்ணாவிரதங்களை நடத்துவதனையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றார்.
இதேபோன்றே இன்றைய தினமும் யாழ்.நல்லூர் ஆலயச் சுற்றாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை காலை 9 மணி தொடக்கம் முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் மாலை 9 மணியளவில், இவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கு பொலிஸார் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு இவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு திருட்டு மின்சாரம் பெற்றார்கள் என்பதே.
இந்நிலையில் மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVes1.html
Geen opmerkingen:
Een reactie posten