ஐக்கியம் மற்றும் வெற்றியின் பச்சை விளக்கை எரிய செய்து ஐக்கிய தேசியக் கட்சி அராங்கத்திற்கு எச்சரிக்கை விளக்கை ஏற்றியிருப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பது போல் பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடும் நபர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இடமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பச்சை விளக்கை ஏற்றி விட்டு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விளக்கை ஏற்றியுள்ளோம். இதனடிப்படையில் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கட்டாயம் வெற்றிபெறும்.
அரச பலத்தை பயன்படுத்தியே அரசாங்கம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தான கட்சியல்ல. சகல மதங்கள் மற்றும் இனங்களுக்கு உரிய கட்சி.
இதனால், எதிர்காலத்தில் நடக்கும் தேர்தலில் கிழக்கில் இரண்டு லட்சம் முஸ்லிம்களின் வாக்குகளையும் வடக்கில் 4 லட்சம் தமிழர்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெறும் எனவும் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnt4.html
Geen opmerkingen:
Een reactie posten