அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மத்திய ஆட்சியில் பங்கேற்குமானால் இலங்கைக்கு எதிராக தமிழர் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் யோசனை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
மத்திய அரசாங்கத்தில் பங்கேற்கும் போது மத்தியில் தமிழ் மொழி அலுவலக மொழியாக மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெற்றோல் உட்பட்ட எரிபொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
http://links.lankasri.com/tamilwin
Geen opmerkingen:
Een reactie posten