தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 februari 2013

மாத்தளை புதைகுழி: உறையவைக்கும் உண்மைகள் !


செம்மணி புதைகுழி, முள்ளிவாய்க்கால் புதைகுழி என்று பேசுவது எல்லாம் இருக்க, தற்போது இலங்கையை உறையவைக்கும் செய்தி என்னவென்று கேட்டால், அது மாத்தளை புதைகுழிதான். முதலில் 10 எலும்புக்கூடுகள் பின்னர் 20 அதன் பின்னர் 30 என்று பெருகி, தற்போது 200 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 200 பேர்வரை கொலைசெய்யப்பட்டு, இப் புதைகுழியில் போடப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும். குறித்த புதைகுழி கோத்தபாயவின் நேரடி பார்வையில் கொல்லப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களது சடலங்களே என தகவல் கசிந்துள்ளது. 1988/89 காலப் பகுதிகளில்... மாத்தளை மாவட்டத்தின் இராணுவப் பிரதானியாக பணியாற்றியவர் இன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவே என்பது தான் அடுத்த அதிரவைக்கும் உண்மையாகும்.

அன்றைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியை முறியடித்து மக்களைக் காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு என பிரதி கல்வியமைச்சரான நந்தமித்திர எக்கநாயக்கா முன்னர் தெரிவித்திருந்தார். நான் அப்போது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்படியிருந்தும் நான் கூறிய பல விடயங்களைக் கருத்தில் கொண்டு கோதபாய ராஜபக்ஷ செயற்பட்டார். மாத்தளையில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி நடவடிக்கைகள் எவ்வாறு அடக்கப்பட்டது என்பது எனக்கும் மக்களுக்கும் தெரியும் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார். 

மாத்தளை வைத்தியசாலை வளவில் மீட்கப்பட்ட நூற்றுக் கணக்கான மனித மண்டையோடுகள் மற்றும் மனித எச்சங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி சுமத்தியிருந்த குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறித்த மண்டையோடுகளுக்கும் மனித எச்சங்களுக்கு உரியவர்கள் 1988/89 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது. இக் கொலைகள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அனைத்து சிங்களத் தரப்பும் இதில் மெளனம் சாதித்துவருகிறது.


Geen opmerkingen:

Een reactie posten