தவிர இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சிராணி பண்டாரநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்தல் விடுவித்துள்ளது.
கம்பஹா பிரதேசத்திலுள்ள ஹெச் டபிள்யு ஹேவகே என்பவரால் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி சிராணி திலகவர்த்தன தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இந்த மனுவை இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
மார்ச் ஐந்தாம் தேதி இந்த மனு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனக்கெதிரான கண்டன பதவிநீக்க நடைமுறையை எதிர்த்து சிராணி பண்டாரநாயக்க செய்திருந்த மனுவை அண்மையில் விசாரித்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், நாட்டின் தலைமை நீதிபதியை விசாரிக்க அந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு நாட்டின் அரசியல் யாப்பிற்கு முரணானது என்று தற்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten