[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 02:15.31 AM GMT ]
இந்த யோசனை மஹிந்த- மைத்திரி இணைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஊடாக மஹிந்தவுக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதனை நிராகரித்துள்ள மஹிந்த ராஜபக்ச மக்கள் தம்மை காப்பாற்றுவதற்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கோருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம், விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் மஹிந்த 6 பேர் இணைப்புக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உயர் பதவிகளில் இருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி பி ஜெயசுந்தர ஆகியோரும் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மஹிந்த-மைத்திரி இணைப்பு 6 பேர் குழுவினருடன் இணைந்து சென்ற இந்த இரண்டு அரச அதிகாரிகளும் ஜனாதிபதியிடம் தமது முறைப்பாட்டை செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft3I.html
தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹிந்த, மைத்திரியின் படங்களை பயன்படுத்துமாறு சந்திரிக்கா ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 12:14.02 AM GMT ]
மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாவட்ட மட்டத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
மக்களை கவர்ந்து கொள்வதற்காக மைத்திரியும் மஹிந்தவும் இணைந்திருக்கும் படங்களை தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேல் மாகாணம் உள்ளிட்ட சில மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மேடைகளில் ஏறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை விமர்சனம் செய்து வரும் சந்திரிக்கா அவரது படத்தைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten