தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juni 2015

வல்வெட்டித்துறையில் வயோதிபர் நையப்புடைக்கப்பட்டார்!

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 01:38.55 PM GMT ]
புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களுக்கான அந்த அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சு சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து, இந்த அமைச்சர் கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்.
இவரது மகன் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சில பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது சாதாரண வகுப்பில் பயணித்து வருகிறார்.
எனினும் குறித்த அமைச்சரும் அவரது மகனும் வர்த்தக வகுப்பில் ஆசனத்தை ஒதுக்கி ஆடம்பரமாக பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyGRUSUft2E.html


வல்வெட்டித்துறையில் வயோதிபர் நையப்புடைக்கப்பட்டார்!
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 03:21.37 PM GMT ]
யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற வயோதிபர் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் மாலை மேற்படி பகுதியில் நின்றிருந்த குறித்த முதியவர் அப்பகுதியால் வந்த சிறுமியை 100 ரூபாய் பணத்தை காண்பித்து வீட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சித்த நிலையில் சிறுமி தப்பித்து ஓட முயன்றபோது சிறுமியை தூக்கவும் முற்பட்டுள்ளார்.
இதனையிடுத்து அங்கிருந்து தப்பித்த சிறுமி ஓடிச் சென்று பெற்றோருக்கு விடயத்தை தெரியப்படுத்திய நிலையில் ஊர் மக்கள் இணைந்து குறித்த வயோதிபரை நைய புடைத்ததுடன் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் வயோதிபரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten