தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

லண்டனில் அட்டைப் பெட்டிமேல் உட்காந்து மாணவர்கள் உண்ணாவிரதம் !




தமிழக மணவர்களுக்கு ஆதரவாக லண்டனில் இளையோர்களின் காலவரை அற்ற கவனயீர்ப்பு போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்து 18.03.13 காலை 11.மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் கால வரையறை அற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை இளையோர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். லண்டன் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்றலில் மாற்று இன மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. லண்டனில் நிலவிவரும் அசாதாரன காலநிலையிலும் இப் போராட்டம் தொடர்கிறது. மட்டைகளை(அட்டைப் பெட்டிகளை) நிலத்தில் போட்டு கடும் குழிரில் அவர்கள் நிலத்தில் இருந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மாணத்தில் உள்ள சில கடுமையான நடவடிக்கைகளை களையுமாறு இந்தியா அமெரிக்காவை கோரியுள்ளது. உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற கொலைகளுக்கு சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அப்பிரேரணையில் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் உறுப்பு நாடு என்ற வகையில் இந்தியா கொடுத்த அழுத்தத்தினால் தற்போது இவ்விடையம் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது. இதில் நாம் ஒரு விடையத்தை கவனிக்கவேண்டும். இன்று மதியம் 12.00 மணியோடு மாற்றங்கள் செய்வதற்கான கால எல்லை முடிவடைகிறது. இதுவரை அமெரிக்க தீர்மாணத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று வேறு எந்த நாடும் கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால் இந்தியாவே தொடர்ந்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தமிழர்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தற்போது லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்னர் , இளையோர்கள் உண்ணாவிரதம் இருப்பதுபோல அனைத்து நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவுக்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். இங்கே அமெரிக்க பிரேரணையை எரிப்பதால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவது இல்லை. அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை யார் (வீரியத்தை இழக்கச் செய்கிறார்களோ) அவர்களைத் தான் நாம் குறிவைக்கவேண்டும். இதனை தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்வது அவசியம் ஆகும். இந்தியாவே இலங்கையை காப்பாற்ற மேலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten