தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 augustus 2015

அதிகாரப்பகிர்வின் மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்!- சோபித தேரர்

மஹிந்தவிற்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படும்!- சிவாஜிலிங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 01:42.56 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினரும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது பாதுகாப்புப் படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களை படுகொலை செய்திருந்தனர்.
இந்த குற்றச் செயல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும்.
இவர்களுக்கு எதிராக சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி வடக்கு அரசியல் கட்சிகளின் கையொப்பங்களுடன் கூடிய மகஜர் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளேன்.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த மகஜர் சமர்ப்பிக்கப்படும்;.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும், பொதுமக்கள் கொலைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.
இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீதான நம்பிக்கை குறைவடையக் கூடும்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என எம்.கே. சிவாஜிலிங்கம் பிரதான சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.
குருணாகல் மாவட்ட வேட்பாளர் சிவாஜிலிங்கத்தின் இந்த செவ்வியே குறித்த சிங்கள பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நேர்காணல்கள் மஹிந்த ராஜபக்ச தரப்பின் வாக்கு எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரிக்கக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிகாரப்பகிர்வின் மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்!- சோபித தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 01:46.37 AM GMT ]
அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கிராம சபை, நகரசபை, பிரதேச சபை என அதிகாரம் தற்போதைக்கே பகிரப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
ஒவ்வொரு தரப்பினரும் கூறுவதனைப் போன்று செய்ய வேண்டிய அவசியமில்லை.
எந்தளவிற்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதனை நாடாளுமன்றம் நிர்ணயிக்க வேண்டும்.
இந்த அதிகாரப் பகிர்விற்கு அனைத்து கட்சிகளும் இணங்கியுள்ளன.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வாக்குறுதி அளித்திருந்தார் எனவும் மாதுலுவாவே சோபித தேரர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten