தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 augustus 2015

விடுதலைப்புலிகள் எழுச்சி பெறமுடியாது! சர்வதேசத்திடம் அடிபணிய மாட்டோம்: சம்பிக்க சூடான பேச்சு

நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகளும், பிரிவினைவாதமும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். வெளிநாடுகளுக்கு அடிபணியவும் மாட்டோம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
பத்தரமுல்லையிலுள்ள “அப்பேகம” கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற “நல்லட்சிக்கான சங்க சம்மேளன மாநாட்டில்” உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு பேசிய அவர்,
கொலைகாரர்கள், திருடர்களுக்கு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு இடமளிக்க வேண்டாம். தேர்தலில் அவர்களை நிராகரியுங்கள்.
நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. விடுதலைப் புலிகளை மீண்டும் தலைதூக்குவதற்கோ பிரிவினைவாதத்திற்கோ நாம் இடமளிக்க மாட்டோம்.
அதேபோன்று வெளிநாடுகளுக்கு அடிமைப்பட மாட்டோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தெற்காசியாவிலும் ஆசியாவிலும் உயர்ந்த நாடாக இலங்கையை மாற்றுவோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten