தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 augustus 2015

திருமலையில் மூன்று வேட்பாளர்கள் கட்சித் தாவல்!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறு: மஹிந்த ராஜபக்ச
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 01:04.45 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறான முடிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
அதைத் தவிர தன் ஆட்சிகாலத்தில் தான் எடுத்த எந்த முடிவு குறித்தும் தனக்கு வருத்தமில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ பிபிசி சந்தேஷ்யவின் சரோஜ் பதிரணவிடம் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமது முன்னணிக்கு 117 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அதையடுத்து தான் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தனக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே மூன்று சந்திப்புகள் இடம்பெற்றதை அவர் உறுதிப்படுத்தும் அதேவேளை, மூன்றாவது சந்திப்பு ரகசியமானது, அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனவும் கூறினார்.
நாட்டில் ஜனாதிபதியாக உள்ளவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடலாம் எனக் கூறும் சர்ச்சைக்குரிய 18ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வந்ததையும் அவர் நியாயபடுத்துகிறார்.
"புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை"
முதல் முறையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறும் குற்றச்சாட்டையும் மஹிந்த ராஜபக்ச புறந்தள்ளுகிறார்.
தனது ஆட்சிக் காலத்தில் சில ஊழல் பேர்வழிகளை தான் காப்பாற்றியுள்ளதையும் பிபிசியிடம் அவர் ஒப்புக் கொண்டார்.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டதற்கும், பிரகீத் எக்நலிகொட காணமல் போனதற்கும் காரணமானவர்கள் தற்போதைய அரசில் உள்ளனர் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 01:25.48 PM GMT ]
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நாளை காலை 9 மணிக்கு ஆஐராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த 31ம் திகதி சாவகச்சேரி நகரில் மேற்படி கட்சியினர் பிரசாரத்திலீடுபட்டிருந்த நிலையில் தேர்தல் சட்டத்திற்கு மாறாக பிரசாரத்திலீடுபட்டதாக கூறி கட்சியின் வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் என்ற வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த விடயத்தில் தாம் தேர்தல் சட்டத்தை மீறாத வகையில் தேர்தல் ஆணையாளர் விடுத்த சட்ட விளக்கங்களுக்கு அமையவே தாம் நடந்து கொண்டதாக தெரிவித்திருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த வழக்கில் பொலிஸாருக்கு எதிராக தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளில் 18 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்?
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 02:13.48 PM GMT ]
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 18 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.
அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.



திருமலையில் மூன்று வேட்பாளர்கள் கட்சித் தாவல்!
[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 04:15.27 PM GMT ]
திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்கள்.
ஜனநாயகக் கட்சியின் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் இன்று மாலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதியின் பிரதான அமைப்பாளர் டாக்டர் அருண சிறிசேனாவின் முன்னிலையில் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள்.
ஜனநாயகக் கட்சியில் தலைவர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் முப்படையினருக்கு எந்த விதமான நலன்புரி வேலைத்திட்டங்களும் முன்னெடுத்து செல்லாததால் அதில் அதிருப்தி அடைந்தே அக்கட்சியிலிருந்து மூன்று பேரும் வேளியேறக் காரணமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மிகுதி நான்கு பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
கட்சியின் முதன்மை வேட்பாளர் எல்.இ.குமாரரத்தின, சேருவில தொகுதி அமைப்பாளர் பி.த.சேனவிரட்ண மற்றும் மேஜர் அனுர மல்லவமடு போன்ற மூவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டவர்களாவர்.
http://www.tamilwin.com/show-RUmtyITZSVmu0E.html

Geen opmerkingen:

Een reactie posten