தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

சிங்கள புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியப் பொலிசார் கொடுத்தது என்ன ?

சிங்களப் பொலிசாரை போட்டு சாத்து சாத்து என்று சாத்திவிட்டு எஸ்கேப் ஆன நபர்கள் யார் ?

[ Aug 04, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 20895 ]
கட்டநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்த வெள்ளை சந்தேகத்திற்கிடமான ஒரு வெளைக் காரை பொலிஸ் மறித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் காரர் அவர்களை மறித்து விசாரணை செய்ய முற்பட்டுள்ளார். இதேவேளை பின் சீட்டில் என்ன இருக்கிறது என்று கேட்டு , காரை சோதனை செய்ய முற்பட்டவேளை அவரை கண்டபடி தாக்கிய அன் நபர்கள். இறுதியில் பொலிஸ் காரர் வந்த மோட்டார் சைக்கிளையே களவெடுத்து அதில் வேகமாக தப்பிவிட்டார்கள். இருப்பினும் காரில் இருந்த பொருட்களையும் அவர்கள் எடுத்துச் செல்ல மறக்கவில்லை.
பொலிஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரது மோட்டார் சைக்கிளையே எடுத்துக் கொண்டு ஓடும் அளவுக்கு யாருக்கு துணிச்சல் உள்ளது என்று கடுப்பாகிய , மாநகர காவல் ஆணையாளர். அங்கே பெரும் படையோடு வந்து விசாரணைகளை முடிக்கி விட்டுள்ளார். நேற்றைய தினம்(03) இது தொடர்பாக தாம் ஒருவரைக் கைதுசெய்து விட்டதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள். சம்பவத்தை வைத்து பார்கும் போது இது போதைப் பொருளோடு சம்பந்தப்பட்ட விடையமாக , அல்லது தங்க பிஸ்கட்டோடு சம்பந்தப்பட்ட விடையமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கட்டநாயக்க விமான நிலையம் ஊடாக , கொண்டுவரப்பட்ட ஏதோ ஒரு பொருளை அவர்கள் கொழும்புக்குள் கொண்டு செல்ல முயன்றுள்ளார்கள். என்றும் கூறப்படுகிறது.

காதலித்து விட்டு களற்றி விடும் இலங்கைப் பெண்களும்: பேஸ் புக்கில் பழிவாங்கும் ஆண்களும் !

[ Aug 04, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 23435 ]
நாளுக்கு நாள் இதுபோன்ற செய்திகள் தான் அதிகம் வருகிறது. பெண்களால் ஏமாற்றப் பட்ட ஆண்கள் ,பழிவாங்கும் விதம் பல சர்சைகளை தோற்றுவித்து வருகிறது. ராஜரட்டை பல்கலைக் கழகத்தில் , அதுவும் மருத்துவ பீடத்தில் 4ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனைக் காதலித்துள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து , அவர் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் அவருக்கு வீட்டார் வேறு ஒரு பையனைப் பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளார்கள். இதனை அறிந்துகொண்ட பழைய காதலன் , குறித்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்ட பின்னர் கூட , பழைய காதலனோடு இவர் ஏன் ஹோட்டல் அறைக்கு சென்றார் என்பது பெரும் கேள்விக் குறிதான்.
இந்த நிலையில் தன்னை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து அதனை பேஸ் புக்கில் வெளியிட்டுவிட்டார் என்று அப்பெண் ரகசியப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹோட்டல் அறையில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் ஏன் அப்பெண் அந்த வேளை கூச்சல் இட்டு , பொலிசாரை அப்போதே அழைக்கவில்லை என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா. உல்லாசமாக இருந்துள்ளாகள். அதனை அந்த முன் நாள் காதலன் படம் எடுத்துவிட்டான். பின்னர் அதனை பேஸ் புக்கில் போட்ட பிற்பாடு தான் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது ஊகம்.
பெண்கள் தம்மை ஏமாற்றிவிட்டால் , அதனை தாங்கிக் கொள்ளும் அல்லது சகிக்கும் தன்மை ஆண்களிடம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. நான் நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று நினைப்பதை விட, அப்பெண்ணை எப்படி பழி வாங்கலாம் என்று தான் உடனே ரூம் போட்டு நினைக்கிறார்கள். மருத்துவப் பிரிவில் 4ம் ஆண்டில் படிக்கும் அந்த மாணவன் இன்னும் 1 வருடம் படித்திருந்தால் டாக்டராகி வெளியேறி இருக்கலாம். பின்னர் அழகான பெண்கள் பலர் கியூவில் வந்து நின்றிருப்பார்கள். கோபத்தால் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார். ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அது இதுதான் போல.
http://www.athirvu.com/newsdetail/4391.html

சிங்கள புலனாய்வாளர்களுக்கு அவுஸ்திரேலியப் பொலிசார் கொடுத்தது என்ன ?

[ Aug 04, 2015 04:48:12 AM | வாசித்தோர் : 19670 ]
abc by athirvu
தமிழர்களை அழிக்க எத்தனை நாடுகள் கங்கணம் கட்டி அலைகிறது என்று பார்த்தால் ஒரு பட்டியலே போடலாம் போல இருக்கிறது. அமெரிக்கா , இந்தியா , தென்னாபிரிக்கா , நோர்வே வரிசையில் தற்போது அவுஸ்திரேலியாவும் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெஞ்சை பதறவைக்கும் பல திடுக்கிடும் தகவல்களை அன் நாட்டின் ABC தொலைக்காட்சியே வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஆனால் அப்படி ஒன்று நடக்காதது போல தமிழ் மீடியாக்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எங்கோ ...யாரோ ஒருவரால் எழுதப்படும் செய்தியை காப்பி அடித்து தமது இணையத்தில் போட்டு பிழைப்பு நடத்தி வரும் இவர்களின் கண்களில் இந்த விடையங்கள் அகப்படவில்லையா ? சரி விடையத்திற்கு வருவோம்..
அவுஸ்திரேலியப் பொலிசார் ரகசியமான முறையில் இலங்கைப் பொலிசாருக்கு உதவி வருவது குறித்து , அன் நாட்டு தேசிய தொலைக்காட்சி நேற்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பலர் காணமல் போதலை, கொலை , மற்றும் சித்திரவதைகளோடு தொடர்புடையவர்கள் யார் என்று கேட்டால் சிறு பிள்ளை கூட சொல்லிவிடும் அது C.I.D பிரிவினர் தான் என்று. அவர்களுக்கு தான் அவுஸ்திரேலியப் பொலிசார் உதவியுள்ளார்கள். அவர்கள் எதனை எல்லாம் கொடுத்துள்ளார்கள் தெரியுமா ? இலங்கையில் உள்ள எந்த நபரின் மோபைல் போனையும் ஒட்டுக் கேட்க்க, மேலும் மோபைல் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஈமெயில்களை மீண்டும் ரிக்கவரி(recover) செய்ய தேவையான உபகரணங்களை கொடுத்துள்ளார்கள். அது மட்டுமா ,வெள்ளை வேன்களையும் அவர்களே கொடுத்துள்ளார்கள்.
இந்த வகையான வெள்ளை வேன்களில் ஆட்களை கடத்தவும் முடியும், கடத்த வேண்டிய ஆளை அருகில் இருந்து நோட்டமிடவும் முடியும். அவர் மோபைல் போனில் யாரோடு உரையாடுகிறார் என்று , வேனில் இருந்தபடியே வேவுபார்த்து பின்னர் அவரை தூக்கவும் முடியும். இந்த கைங்கரிய எழிய வேலைகளை அவுஸ்திரேலியா செய்துள்ளது. அட ஏன் ? என்ற கேள்வி எழும் அல்லவா ? அவர்கள் இதுபோன்ற உதவிகளை செய்தது அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகளை சி.ஐ.டியினர் மடக்கி பிடிப்பார்கள் என்று தானாம். ஆனால் அதனை பாவித்து பல அதி நவீன பொருட்களை இலவசமாக பெற்றுக்கொண்ட சிங்கள சி.ஐ.டி யினர் அதனை தமிழர்களுக்கு எதிராக பாவித்து. தமிழர்களையே சித்திரவதை செய்துள்ளார்கள். அதுமட்டும் அல்ல IBM கம்பியூட்டர் கம்பெனி பிரத்தியேகமாக தயாரித்த(எந்த தனி நபருக்கும் கிடைக்காது- -- அரசாங்கம் மட்டுமே வாங்க கூடிய) i2 அதி நவீன சாப்ட் வேர்களை அவுஸ்திரேலியா கொடுத்துள்ளது.
அதில் வெறும் பெயர்களை மற்றும் படங்களை போட்டுக்கொண்டு வந்தால் போதும். அது வெவ்வேறு வலை அமைப்புகள். அதாவது ரிவீட்டர் , பேஸ் புக் என்று உலகில் உள்ள அனைத்து வலை அமைப்புகளையும் அது ஆராய்ந்து , குறித்த நபர்களின் உறவினர்கள் யார் யார் ? எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற சகல தகவல்களையும் அவர்களுக்கு கொடுத்துவிடும். ஒரு புலிகள் இயக்க உறுப்பினர் , அவரது தொடர்புகளை அறிய இது மிகவும் துல்லியமான மென் பொருள்(சாப்ட் வேர்) ஆகும். இதனை கூட அவுஸ்திரேலியா 4ம் மாடியில் உள்ள சிங்கள நபர்களுக்கு வழக்கியுள்ளது. இதனை பாவித்தே பலரை கொழும்பில் கைது செய்துள்ளார்கள் பொலிசார். இப்போது பலருக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என நாம் கருதுகிறோம்.. எனது உறவினர் எப்படி கைதானார். சிங்களப் பொலிசார் அவரை எப்படிப் பிடித்தார்கள் என்று நீங்கள் ஒரு காலத்தில் நினைத்திருப்பீர்கள்.
மேலும் கொழும்பில் உள்ள 4 சி.ஐ.டி அலுவலகங்களை , அவர்கள் புதுப்பித்துக் கொடுத்துள்ளார்கள். தேவையான கம்பியூட்டர்களை அவர்கள் , கொடுத்து மேலும் உதவிகளை செய்து கொடுத்துள்ளார்கள். அதாவது முன்னர் சற்று ஒழுங்கில்லாத இடத்தில் வைத்து சித்திரவதை செய்தீர்கள். இப்ப நாங்கள் நல்ல இடம் ஒன்றைக் கட்டி தந்து இருக்கிறோம். அந்த புது இடத்தில் வைத்து சித்திரவதை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். நல்ல ஆட்சி இலங்கையில் உதித்து விட்டதாக கூறி பல தமிழர்கள் ,நாட்டுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கூட ,எனது 16 வயது சகோதரனை சி.ஐ.டி யினர் அழைத்துச் சென்று அடித்தார்கள் என்று கூறுகிறார் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தமிழர். ஆக மொத்தத்தில் திரை மறைவில் தற்போதும் சித்திரவதைகளும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் இன்னும் நடைபெற்று வருகிறது என்பதே உண்மை நிலையாகும்.
இதனை தமிழர்கள் கூறவில்லை. அவுஸ்திரேலியாவில் உள்ள அன் நாட்டு தேசிய தொலைக் காட்சி கூறுகிறது. ஆனால் எங்களைப் பாருங்கள் இலங்கையில் ஏதோ ஜனநாயகம் திரும்பிவிட்டதாகவும். தேர்தலில் யார் வெல்லுவார்கள் என்று ஒரு கோஷ்டியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பிடிக்கவேண்டும் என்று ஒரு கோஷ்டி இலவச பேப்பர் அடித்து யாழில் வெளிவிடுவதுமாக இருக்கிறது எங்கள் நிலை. வெட்கி தலை குனிவை ஏன் ஏற்படுத்துகிறீர்கள் ? தமிழர்களே ?
லண்டனில் உள்ள தமிழர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்வார்களா ? அவுஸ்திரேலிய தூதரகத்தை முற்றுகையிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்துவார்களா ? பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
சில நாடுகளில் வீடியோ தெரியாது: அன் நாடுகளில் உள்ளவர்கள் எமது இணையத்தில் உள்ள இந்த வீடியோவைப் பார்க முடியும்.:
அதிர்வுக்காக,
கண்ணன்
http://www.athirvu.com/newsdetail/4393.html

Geen opmerkingen:

Een reactie posten