மீறல்கள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 17 juni 2011
இலங்கையின் படுகொலைக் களம் சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம்
(வீடியோ இணைப்பு)
சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னும் தலைப்பில் ஓரு ஆவணத் திரைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள, பிரிட்டன் செய்தி சனல் 4 ஆவணப் படமாக்கி நேற்று வெளிவிட்டது.
'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...இதுபோன்ற கொடூரமான செயல்களை செய்த சிங்களப் படைகளினதும் அவர்களை ஏவிய இலங்கை அரசாங்கத்தினதும் ஈனச் செயல்களை படம்பிடித்து சனல் 4, ஐ.நா வரை காட்டிய போதிலும் அதனை பொய் என்கிறது இலங்கை அரசு.
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten