தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 maart 2017

அரச தொலைக்காட்சி நிறுவனத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை விசாரணை ஆரம்பம்: கயந்த

அரசாங்க தொலைகாட்சி நிறுவனத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில பெண்கள் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதால் தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்தவிட்டால் தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக அந்த பெண் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten