தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 maart 2017

தமிழர்கள் தீவிரவாதிகளா..? ஐ.நாவில் வெடித்தது சர்ச்சை!

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முக்கியமான விடயங்களை இலங்கை நிறைவேற்ற தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனேடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றியிருந்த அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் நேற்றைய தினம் இலங்கை குறித்த தனது அறிகையினை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், இலங்கை குறித்து ஐ.நா பக்க அறையில் விவாதங்களும், இடம்பெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், தமிழர் தரப்பின் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் எப்படி இருக்கின்றது..?
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இது குறித்த விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.


http://www.tamilwin.com/interviews/01/137691

Geen opmerkingen:

Een reactie posten