தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 maart 2017

ரஜினியை இலங்கைக்கு அழைத்து வருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்!

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த கண்டன போராட்டம் இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் யாழ். நல்லூரில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈழத்துக் கலைஞர்கள் எனக் குறிப்பிடப்பட்டு யாழ் .குடாநாட்டின் முக்கிய இடங்கள் உட்படப் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டியில் ரஜினியின் படம் பொறிக்கப்பட்டு "இலட்சக் கணக்கான தமிழ்மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா!!!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'திருமாளவா..வேல்முருகா.. ஈழத் தமிழனை வைத்துப் பிழைப்பு நடாத்தாதே!, சுயநலவாதிகளே ஈழத்தமிழனின் விடயத்தில் தலையிடாதே, திருமாளவா..வேல்முருகா.. கலைஞர்களைக் கலைஞர்களாக வாழவிடு, எமது தலைவன் எம்மைக் காணத் தடுக்க நீங்கள் யார்?, மகிந்தவிற்குக்கரங் கொடுத்த உங்களுக்குத் தலைவனைத் தடுக்க என்ன தகுதி?' போன்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten