தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 maart 2017

சுப்பிரமணியன்சாமி மரணம் ?

தமிழர்கள் சுப்பிரமணியன்சாமி அளவுக்கு தரங்கெட்டு நடப்பது நல்லதல்ல, மிகக்கவலைக்குரிய விடயம்!

தமிழன் எதிரியைக் கூட மதிப்பவன் என்ற இலக்கணம் இப்படியா பிழைக்கவேண்டும்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன்சாமி மரணம் அடைந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை முகநூல் வழியாக பரவ விடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதிவை எவரோ ஸ்கீரின் ஷாட் எடுத்து வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளனர் .


முகநூலில் வைரலாகும் சுப்பிரமணியன்சாமியின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பதிவில் கூறியுள்ளதாவது :-

ஒரு மனுஷனை இப்படியா கலாய்க்கிறது ?

கண்ணீர் அஞ்சலி

எங்கள் தெரு பொருக்கி தலைவன் மாரடைப்பால் மரணம் அடைந்ததை மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறோம்.

இங்கனம் என அப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர்களை சுப்பிரமணியன்சாமி சமீபகாலமாக பொருக்கி என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்தே இவ்வாறு முகநூலில் மரணச் செய்தி வைரலாகி வருகின்றது.
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1490036102&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten