தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 maart 2017

பிரான்சில் இருந்து 50 தமிழர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.! இன்னும் பலருக்கு ஆபத்து!


பிரான்சில் இருந்து 50 தமிழர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.! பிரான்சில் சட்டவிரோதமாக வசித்த குற்றச்சாட்டில் 50 தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்,
இவர்களை கடந்த 3 மாதங்களாக கைது செய்து வைத்திருந்து பின்னர் நேற்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக திருப்பியனுப்பப் பட்ட தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார் ,
இவர்களை சிறையில் இருந்து விசாரணை செய்வதாக கூறியே அழைத்து சென்றதாகவும் , ஆனால் பலவந்தமாக கையில் விலங்குடன் விமானத்தில் வைத்து அனுப்பியதாகவும் , இலங்கை விமான நிலையத்தில் இவர்களில் சிலரை புலனாய்வுத் துறையினர் விசாரணைகள் செய்ய அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது ,
அத்துடன் இன்னும் பல தமிழர்கள் பிரான்சில் உள்ள சிறைகளில் இருப்பதாகவும் , இவர்களுக்கும் இதே கதி நேரலாம் என அச்சம் நிலவுகிறது , ஆகவே உங்கள் உறவுகளை போலீசார் கைது செய்தால் உடனடியாக சட்டத் தரணியை அணுகி இவர்களை காப்பாற்ற உதவி செய்யுங்கள்.
இலங்கையர்களை போலீசார் கைது செய்தால் சிறிய காலத்தில் வெளியில் விட்டு விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கை காரணமாகவே பலர் இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
http://www.jvpnews.com/srilanka/225996.html

Geen opmerkingen:

Een reactie posten