தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 maart 2017

குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சயனைட் அருந்தி தற்கொலை: ராஜூவ் காந்தி கொலைக்கும் அதுவே காரணம்

மரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி
குமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே – பிற நாடுகளில் – இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.
அதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.
“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.
“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.
“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.
“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.
“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா? என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது? அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.
“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”
இவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.asrilanka.com/2017/03/02/41089#sthash.vNPB13DM.dpuf

குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சயனைட் அருந்தி தற்கொலை: 
ராஜூவ் காந்தி கொலைக்கும் அதுவே காரணம்
குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பிர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக மேஜர் ஷெனன் சிங்குக்கு இலங்கை இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங் எழுதி வெளியிட்டுள்ள நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mission overseas - daring operations by the indian military என்ற தலைப்பில் இந்த நூல் எழுதி வெளியிட்டப்டுள்ளது.
இந்தியாவுக்கு வெளியே இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1987ஆம் ஆண்டு பவன் என்ற பெயரில் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்த நூலில் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்திய அமைதி காக்கும் படையினர் வசம் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 13 பேரையும், இலங்கை இராணுவத்திடம் ஒப்டைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த 13 பேரையும் தடுத்து வைத்திருந்த பலாலி உணவகத்தின் பாகாப்பை இலங்கை இராணுவத்தினரிடன் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை 10 மணியளவில் இலங்கை இராணுவுத்தின் 54ஆவது படைப்பிரிவில் இருந்து இந்த தகவல் வழங்கப்பட்டது.
எனினும், இந்த தகவல், இந்திய அமைதி காக்கும் படைக்கு மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியை எற்படுத்தியிருந்தாகவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம், குறித்த 13 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீண்டும் கையளிப்பது முறையல்ல எனவும், மேஜர் ஷெனன் சிங் கருதினார்.
அத்துடன், குறித்த 13 பேரும் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் அடிப்பணியாது என விடுதலைப்புலிகள் நம்பியிருந்ததாகவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதயைடுத்து, இலங்கை இராணுவத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை டெல்லிக்கு தெரியப்படுத்திய போது குறித்த 13 பேரையும் இலங்கை இராணுவத்திடம் கையளிக்குமாறு மேஜர் ஷெனன் சிங்குக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
இதனைக்கேட்டு தெரிந்து கொண்ட முன்னாள் போராளி குமரப்பா, ”ஏன் இப்படி செய்கின்றீர்கள்..? எங்களை இலங்கை இராணுவத்திடம் கையளித்தால் அதுவே எமது கடைசி நாளாக அமையும். இதனை எங்கள் தலைவர்கள் கூறியிருக்கின்றார்கள்” என மேஜர் ஷெனன் சிங்கிடம் தெரிவித்தார்.
எனினும், குறித்த 13 பேரையும் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைய அன்று மாலை 4 மணிக்கு இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், சிறிது நேரத்தின் பின்னர் மேஜர் ஷெனன் சிங்கை தொடர்பு கொண்ட இலங்கை இராணுவத்தினர் குறித்த 13 பேரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவமே இந்திய இராணுவத்தினரின் மீது விடுதலைப் புலிகள் காழ்ப்புணர்ச்சியாக மாற்றமடைய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியில் குறித்த விடயமானது இந்தியாவின் முன்னாள் பிராமர் ராஜூவ் காந்தியை கொலை செய்வதற்கு காரணமாக அமைந்தது என அந்த புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten