தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 maart 2012

யாழில் வெளிநாட்டு பயணிகளை கலங்க வைக்கும் போர்க் கால அழிவுகள்!!


போருக்கு பிந்திய இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்கின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பலரும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகின்றார்கள் – போகின்றார்கள்.
இவர்களின் கண்களை யாழ்ப்பாணத்தின் ஏராளமான காட்சிகள் கொள்ளை கொள்கின்றன. அதே நேரம் வேறு பல காட்சிகள் கண்ணீர் வடிக்கவும்வைக்கின்றன.
அதாவது நவீனமயப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் இவர்களை அதிசயப்பட வைக்கின்றது. அதே நேரம் போரின் எச்சங்களை சுமந்து நிற்கின்ற யாழ்ப்பாணம் அழ வைக்கின்றது.
போரின் எச்சங்கள் அகோரமானவை என்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்று இருக்கின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் இருவர் பயணக் கட்டுரையில் எழுதி உள்ளார்கள்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் போர்க் கால எச்சங்களை கமராவில் படம்பிடித்து வெளியிட்டும் உள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten