தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

நவநீதம்பிள்ளையின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் !



ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் வெளியிட்ட கருத்துக்கள் அவரது உண்மையான முகத்தை வெளிக்காட்டியதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமை ஆணையாளரின் உண்மையான முகம் என்ன என்பது தெரியவந்துள்ளது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அவர் யோசனை ஒன்றை கொண்டு வருவார் என்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை தேசிய ரீதியில் நம்பகத்தன்மையான விசாரணைகளை நடத்தவில்லை என்றால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படலாம் என தெரிவித்திருந்தார்.
அதேவேளை இலங்கைக்கு 7 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்து கொண்ட நவநீதம்பிள்ளை இன்று அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இன்று அதிகாலை 12.25 அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.553 என்ற விமானத்தில் அவர் ஜெர்மனியை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய முகாமையாளார் தெரிவித்தார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWms6.html#sthash.ym7jZHar.dpuf

Geen opmerkingen:

Een reactie posten